Skip to main content

கொவிட்-19 தடுப்பூசியின் முதல் தொகுதி பிரித்தானியாவுக்கு வந்தடைந்தது!

Dec 05, 2020 240 views Posted By : YarlSri TV
Image

கொவிட்-19 தடுப்பூசியின் முதல் தொகுதி பிரித்தானியாவுக்கு வந்தடைந்தது! 

ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் உருவாக்கிய கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் தொகுதி பிரித்தானியாவுக்கு வந்துள்ளது.



இது வெளியிடப்படாத இடத்தித்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இப்போது பிரித்தானியாவைச் சுற்றியுள்ள மருத்துவமனை தடுப்பூசி மையங்களுக்கு விநியோகிக்கப்படும்.



இங்கிலாந்து 40 மில்லியன் அளவுகளை முன்பதிவு செய்துள்ளது. இது 20 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போட போதுமானது.



இங்கிலாந்தின் துணை தலைமை மருத்துவ அதிகாரி, தடுப்பூசிகளின் முதல் அலை 99 சதவீதம் வரை கொவிட்-19 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறப்பதைத் தடுக்கலாம் என கூறினார்.



பேராசிரியர் ஜொனாதன் வான்-டாம், முதல் முன்னுரிமை பட்டியலில் உள்ள அனைவரும் தடுப்பூசியை எடுத்துக் கொண்டால் அது சாத்தியமாகும். அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.



மேலும், தடுப்பூசியை விரைவாகவும் முடிந்தவரை அதிக அளவிலும் விநியோகிப்பது முக்கியம் என்று அவர் கூறினார்.



ஆனால் பட்டியலில் சில நெகிழ்வுத்தன்மை இருக்க வேண்டும் என்று அவர் ஒப்புக் கொண்டார்.



ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் தடுப்பூசிகள் பெல்ஜியத்தில் தயாரிக்கப்பட்டு யூரோ சுரங்க வழியாக பிரித்தானியாவுக்கு சென்றுள்ளன.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

3 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

3 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

3 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை