Skip to main content

மதுரை பாண்டி கோயில் பூசாரி கொலை செய்யப்பட்ட வழக்கில், ஒருவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்!

Oct 28, 2020 279 views Posted By : YarlSri TV
Image

மதுரை பாண்டி கோயில் பூசாரி கொலை செய்யப்பட்ட வழக்கில், ஒருவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்! 

மதுரையில் மிகவும் பிரபலமான கோவில்களுள் ஒன்று பாண்டி கோவில். இந்த கோவிலின் பூசாரியாக மதுரையை ஆண்ட வட்டாரத்தைச் சேர்ந்த முத்துராஜா என்பவர் இருந்து வந்தார். கடந்த 2 வாரங்களுக்கு முன்னர், அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் கோவில் வாசலில் சடலமாகக் கிடந்தனர். தகவல் அறிந்து வந்த அண்ணாநகர் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.



இச்சம்பவம் தொடர்பாக போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், பூசாரி முத்துராஜாவுக்கும் கருப்பாயூரணியை சேர்ந்த ஒரு கும்பலுக்கும் இடையே ஒரு வருடத்திற்கு முன்னர் மோதல் ஏற்பட்டதாகவும் அந்த முன்விரோதத்தில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.



இந்த நிலையில், பூசாரி முத்துராஜா கொலை செய்யப்பட்ட வழக்கில் மலைராஜன் என்பவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை