Skip to main content

உத்திர பிரதேசத்தில் துப்பாக்கியை காட்டி மிரட்டி பட்டியலின இளம்பெண் பாலியல் வன்கொடுமை!

Oct 19, 2020 225 views Posted By : YarlSri TV
Image

உத்திர பிரதேசத்தில் துப்பாக்கியை காட்டி மிரட்டி பட்டியலின இளம்பெண் பாலியல் வன்கொடுமை! 

உத்திர பிரதேசத்தில் துப்பாக்கியை காட்டி மிரட்டி பட்டியலின இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.



உத்தரபிரதேசத்தின் கான்பூர் தேஹத் மாவட்டத்தில் பட்டியலின பெண் ஒருவரை, முன்னாள் கிராமத் தலைவர் உட்பட இரண்டு பேர் துப்பாக்கியை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இச்சம்பவம் கடந்த வாரம் நடந்த நிலையில், நேற்று தான் போலீசார் கவனத்துக்கு சென்றுள்ளது. நேற்று பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.



இது குறித்து பேசிய காவல்நிலைய அதிகாரி , அந்த பெண் வீட்டில் தனியாக இருந்த போது அங்கு சென்ற குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், துப்பாக்கி முனையில் ஒவ்வொருவராக பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் இதனை வெளியே சொன்னால் விளைவுகள் மோசமாக இருக்கும் என அந்த பெண்ணை மிரட்டி வன்கொடுமை செய்ததாகவும் கூறியுள்ளார். குற்றவாளிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த 2 பேரையும் வலைவீசித் தேடி வருகின்றனர். மேலும், அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை