சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்து ஊழியர்களை தாக்கிய விவகாரத்தில் 19 பேர் மீது வழக்கு!
Oct 09, 2020 245 views Posted By : YarlSri TV
சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்து ஊழியர்களை தாக்கிய விவகாரத்தில் 19 பேர் மீது வழக்கு!
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில், வாடகை கட்டடத்தில் ஷா நவாஸ் என்பவர் சூப்பர் மார்க்கெட் நடத்தி வந்துள்ளார். இவரது கடைக்குள் நேற்று புகுந்த 50 பேர் கொண்ட மர்ம கும்பல் அங்கிருந்தவர்களை தாக்கியுள்ளனர். அத்துடன் அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர்.
இதில் கடை ஊழியர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். பின்னர் பில் போடும் கம்ப்யூட்டரின் சிபியூவை எடுத்து சென்றுள்ளனர். இதுகுறித்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சிலரை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் கடை உரிமையாளர் ஷா நவாஸ் மற்றும் கட்டட உரிமையாளர் ரஃபிகா இடையே வாடகை பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் கடை தாக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பாஜக கலை இலக்கியப் பிரிவைச் சேர்ந்த குணசேகரன், மத்திய சென்னை மேற்கு மாவட்ட பாஜக செயலாளர் காமேஸ்வரன் உள்பட 19 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 19 பேரும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago