Skip to main content

சர்வகட்சி அரசுக்கு சுதந்திரக் கட்சி பூரண ஆதரவு: மைத்திரி அறிவிப்பு

Jun 08, 2022 73 views Posted By : YarlSri TV
Image

சர்வகட்சி அரசுக்கு சுதந்திரக் கட்சி பூரண ஆதரவு: மைத்திரி அறிவிப்பு 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது நாட்டில் சர்வகட்சி அரசை உருவாக்குவதற்காக முழுமையான நிபந்தனையற்ற ஆதரவை வழங்குகின்றது என அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.



பொருளாதார நெருக்கடி



 



சர்வகட்சி அரசுக்கு சுதந்திரக் கட்சி பூரண ஆதரவு: மைத்திரி அறிவிப்பு



இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாடுகளினதும், நாணய அமைப்புகளினதும் உதவியை பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



நாடாளுமன்றில் இன்று(8) உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.



மைத்திரியின் கருத்து



சர்வகட்சி அரசுக்கு சுதந்திரக் கட்சி பூரண ஆதரவு: மைத்திரி அறிவிப்பு



அவர் மேலும் தெரிவித்ததாவது, "நாம் சர்வதேச நாடுகளின் உதவிகளை பெற்றுக்கொள்வதற்கு பேச்சுகளை மேற்கொண்டபோது, நாட்டில் சர்வகட்சியொன்றை உருவாக்கினால் மாத்திரமே தாங்கள் உதவிகளை வழங்குவதாக சர்வதேச நாடுகள் தெரிவித்தன.



எனவே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது நாட்டில் சர்வகட்சி அரசொன்றை உருவாக்குவதற்காக முழுமையான நிபந்தனையற்ற ஆதரவை வழங்குகின்றது" என கூறியுள்ளார். 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை