Skip to main content

மகாராஷ்டிராவில் இன்று மேலும் 189 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!

Sep 29, 2020 230 views Posted By : YarlSri TV
Image

மகாராஷ்டிராவில் இன்று மேலும் 189 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது! 

சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவி உள்ள ஆட்கொல்லி கொரோனா மராட்டியத்தை புரட்டி போட்டு உள்ளது. குறிப்பாக மாநில தலைநகர் மும்பை, புனே நகரங்களில் நோய் தொற்று அசுர வேகத்தில் பரவி வருகிறது.



நாட்டிலேயே கொரோனா தொற்று பாதிப்பு மகாராஷ்டிராவில் தான் அதிக அளவு காணப்படுகிறது. கொரோனா தொற்றுக்கு எதிராக களத்தில் முன்னின்று பணியாற்றும் காவல்துறையினரும் மகாராஷ்டிராவில் அதிக அளவில் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.



இதன்படி, மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் காவலர்கள் 189 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அம்மாநிலத்தில் இதுவரை 22,818 போலீசார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 19,385 பேர் தொற்று பாதிப்பில் இருந்து மீண்ட நிலையில், 3,188 பேர் நோய்த்தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பால் மகாராஷ்டிர போலீசார் 245 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை