ஹேக்கர்கள் கைவரிசை - முடங்கி போன டொனால்டு டிரம்ப் வலைதளம்!
Oct 19, 2021 164 views Posted By : YarlSri TV
ஹேக்கர்கள் கைவரிசை - முடங்கி போன டொனால்டு டிரம்ப் வலைதளம்!
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வலைதளம் ஹேக் செய்யப்பட்டது. டிரம்ப் வலைதளத்தை இயக்க முற்பட்டால், துருக்கியை சேர்ந்த ரூட்அயில்டிஸ் குழு உருவாக்கிய வலைப்பக்கம் திறந்தது.
அந்த வலைப்பக்கத்தில், 'அல்லாவை மறந்தவர்களை போன்று இருக்காதீர்கள், கூட்டணியே அவர்களை மறக்க செய்திருக்கிறது. இங்கு அவர்கள் உண்மையில் வழிமாறி சென்றனர்.' எனும் வாசகம் இடம்பெற்று இருக்கிறது. இதே வாசகம் துருக்கி மொழியிலும் எழுதப்பட்டு இருக்கிறது.
இத்துடன் ஹேக்கர்களின் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பக்கங்களுக்கான இணைய முகவரியும் அந்த வலைப்பக்கத்தில் இடம்பெற்று இருந்தது. உலகளவில் பல்வேறு அரசியல் தலைவர்களை குறிவைத்து சைபர் தாக்குதல்களை ரூட்அயில்டிஸ் குழு நடத்தி வருகிறது.
முன்னதாக பலமுறை அமெரிக்க அரசியல் தலைவர்களின் வலைதளங்கள் இதேபோன்று ஹேக் செய்யப்பட்டு இருக்கின்றன. ஹேக் செய்யப்பட்ட டிரம்ப் வலைதளம் தற்போது சீராக இயங்குகிறது.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைவிட வேண்டும் - அமெரிக்கா எச்சரிக்கை
-
மியான்மரில் கடந்த பிப்ரவரி முதல் தேதியன்று, ஆங் சான் சூகியின் ஆட்சியை புரட்சியின் மூலம் கவிழ்த்து, ராணுவம் ஆட்சியை பிடித்துள்ளது. இதை ஏற்காத மக்கள், ராணுவத்துக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், அங்கு அசாதாரணமான சூழல் ஏற்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 100 பேரை ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது. ராணுவம் ஆட்சிக்கு பயந்து, மியான்மரில் இருந்து ஏராளமானோர் இந்தியாவுக்குள் எல்லை வழியாக தப்பி வருகின்றனர். சமீபத்தில், மியான்மர் காவல் துறையை சேர்ந்த 30 அதிகாரிகள் தங்கள் குடும்பத்துடன் வடகிழக்கு மாநிலமான மிசோராமுக்கு வந்து தங்கியுள்ளனர். இது பற்றி ஊடகங்களில் பரபரப்பாக செய்தி வெளியானது . இந்நிலையில், தப்பி வந்த போலீசாரில் 8 பேரை மட்டும் திருப்பி அனுப்பும்படி இந்தியாவுக்கு மியான்மர் ராணுவ அரசு கடிதம் எழுதியுள்ளது. அது கேட்டுள்ள போலீசார் அனைவரும் 22 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள். இவர்களை மட்டும் ஒப்படைக்கும்படி மியான்மர் ராணுவம் கேட்டு இருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் கோரிக்கை பரிசீலிக்கப்படுவதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன!
-
இதுவரை தனிமைப்படுத்தல் செயற்பாட்டை வெற்றிகரமாக நிறைவு செய்த 12, 450 பேர் வீடுகளுக்கு..!
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago