லண்டனில் இருந்து சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்த கோவை பெண் ஒருவர் தனியார் ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், கொரோனா பயத்தில் தற்கொலை!
Aug 28, 2020 257 views Posted By : YarlSri TV
லண்டனில் இருந்து சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்த கோவை பெண் ஒருவர் தனியார் ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், கொரோனா பயத்தில் தற்கொலை!
லண்டனில் இருந்து சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்த கோவை பெண் ஒருவர் தனியார் ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், கொரோனா பயத்தில் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலக நாடுகளில் கொரோனா காரணமாக சிக்கித்தவித்த இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசு ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்களை கடந்த மே மாதம் முதல் இயக்கி வருகிறது. இதையொட்டி, பல்வேறு நாடுகளில் இருந்து சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு இதுவரை 68 ஆயிரத்து 306 பேர் வந்து சேர்ந்து உள்ளனர். இதில் 899 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டு உள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து வரக்கூடியவர்கள் அரசு கல்லூரிகளில் இலவசமாகவும், தனியார் ஓட்டல்களில் கட்டணம் செலுத்தியும் 14 நாள் தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டு அதன் பின்னர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இந்த நிலையில், கடந்த 24-ந் தேதி லண்டனில் இருந்து வந்த பயணிகள் பரங்கிமலையில் உள்ள தனியார் ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டனர். இங்கு லண்டனில் இருந்து வந்திறங்கிய கோவை மாவட்டத்தை சேர்ந்த மனோன்மணி (வயது 47) என்ற பெண்ணும் தங்கி இருந்தார். பரிசோதனை முடிவில் இவருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரியவந்தது.
ஆனாலும் இவர் மேலும் ஒரு வார காலம் தங்க வைக்கப்பட்டு இருந்தார். இதற்கிடையே லண்டனில் உள்ள தனது மகளிடம் தொடர்பில் இருந்த மனோன்மணி, கொரோனா தொற்று இல்லாமல் தங்கியுள்ளது பயமாக உள்ளதாக தொடர்ந்து புலம்பி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் லண்டனில் உள்ள அவரது மகள் செல்போனில் மனோன்மணியை தொடர்பு கொண்ட நிலையில், அவர் நீண்ட நேரமாக போனை எடுக்காததால் சந்தேகமடைந்து நண்பர்கள் மூலம் ஓட்டலுக்கு சென்று பார்க்குமாறு தகவல் கூறினார். அப்போது அவர்கள் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது, அறைக்குள் மனோன்மணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் பரங்கிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மனோன்மணி கொரோனா தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்தில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
3 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
3 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1477 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1477 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1478 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1478 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1478 Days ago