Skip to main content

சீமான் உள்பட 20 பேர்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்!

Aug 18, 2020 276 views Posted By : YarlSri TV
Image

சீமான் உள்பட 20 பேர்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்! 

மதுரவாயல் அருகே நேற்று ஊரடங்கை மீறி புதிய கல்வி கொள்கையை எதிர்த்து சீமான் இல்லத்தின் முன் போராட்டம் நடைபெற்றது.



இதுதொடர்பாக சீமான் உள்பட 20 பேர்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சென்னை மதுரவாயல் அருகே ஆலப்பாக்கம், அஷ்டலட்சுமி நகரில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இல்லம் உள்ளது.



இவரது வீட்டின் முன் நேற்று நாம் தமிழர் கட்சி உள்பட ஒருசில கட்சியினரின் புதிய கல்வி கொள்கையை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.



இதில் பங்கேற்றவர்கள், சமூகநீதிக்கு எதிரான புதிய கல்வி கொள்கையை கைவிட வேண்டும் என்பது உள்பட மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.



இதையடுத்து, முழு ஊரடங்கு தடையை மீறி ஆட்களை திரட்டி போராட்டம் நடத்தியதாக சீமான் உள்பட 20 பேர்மீது ஐபிசி 143, 188 ஆகிய பிரிவுகளின்கீழ் மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை