50 கிலோ கஞ்சா பொதியுடன் இளம் குடும்ப பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்!
Aug 21, 2020 314 views Posted By : YarlSri TV
50 கிலோ கஞ்சா பொதியுடன் இளம் குடும்ப பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்!
கிளிநொச்சி- முரசுமோட்டை பகுதியில் 50 கிலோ எடையுடைய
கஞ்சா பொதியுடன் இளம் குடும்ப பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி- இரணைமடு விமானப்படையினரால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய, கிளிநொச்சி- புலனாய்வுப்பிரிவு பொறுப்பதிகாரி, குறித்த தகவலை கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பிரதிபொலிஸ்மா அதிபர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்து நேற்று (20), கிளிநொச்சி தலைமை பொலிஸ் நிலைய பதில் கடமை பொறுப்பதிகாரி, சம்பிக்க தலைமையிலான பொலிஸ் குழுவினரால் முரசுமோட்டை பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது அப்பகுதியிலுள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 50 கிலோ எடையுடைய கஞ்சா பொதி மீட்கப்பட்டது. பின்னர் வீட்டிலிருந்த குடும்பப்பெண் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும், கைது செய்யப்பட்ட பெண்ணை நான்கு நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை மேற்கொள்வதற்கு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸாரினால் அனுமதி கோரப்பட்டுள்ளது.
குறித்த கஞ்சா பொதி, கைது செய்யப்பட்ட பெண்ணின் கணவரால் கொண்டுவரப்பட்டது எனவும் குறித்த சுற்றிவளைப்பின்போது அவர் தப்பியோடியுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
5 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
5 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
5 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
5 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
5 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1483 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1483 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1483 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1484 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1484 Days ago