Skip to main content

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி இத்தாலி நோக்கி பயணிக்க முற்பட்ட இலங்கை யுவதி கைது!

Aug 17, 2020 335 views Posted By : YarlSri TV
Image

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி இத்தாலி நோக்கி பயணிக்க முற்பட்ட இலங்கை யுவதி கைது! 

போலி தகவல்களை உள்ளடக்கிய வீசா மற்றும் கடவுச்சீட்டை பயன்படுத்தி டோஹா ஊடாக  இத்தாலி



நோக்கி பயணிக்க முற்பட்ட இலங்கை யுவதி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.



சிலாபம், கட்டுனேரிய பகுதியை சேர்ந்த 19 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.



நேற்று (16) அதிகாலை 3.15 மணியளவில் டோஹா நோக்கி பயணிக்கவிருந்த கட்டார் விமான சேவைக்கு சொந்தமான QR என்ற விமானத்தில் பயணிப்பதற்காக குறித்த யுவதி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.



இதன்போது குறித்த பெண் சமர்பித்த கடவுச்சீட்டு தொடர்பில் சந்தேகம் ஏற்பட அவரிடம் விசாரித்த போது இத்தாலியில் உள்ள பெண் ஒருவரின் தகவல்களை பயன்படுத்தி அவர் இந்த போலி ஆவணங்களை தயாரித்தாக தெரிவித்துள்ளார்.



இதனையடுத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

18 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை