நல்லூர் ஆலய தேர் உற்சவத்திற்கு பெருமளவில் மக்கள் வருவதனை தவிர்த்து வீட்டில் இருந்து முருக கடவுளை தரிசியுங்கள் என யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனாரட்ன தெரிவித்துள்ளார்!
Aug 15, 2020 320 views Posted By : YarlSri TV
நல்லூர் ஆலய தேர் உற்சவத்திற்கு பெருமளவில் மக்கள் வருவதனை தவிர்த்து வீட்டில் இருந்து முருக கடவுளை தரிசியுங்கள் என யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனாரட்ன தெரிவித்துள்ளார்!
நாளை மறுதினம் இடம்பெறவுள்ள நல்லூர் ஆலய வருடாந்த தேர் உற்சவம் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் முகமாக ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்
கடந்த மாதம் 25ஆம் திகதியிலிருந்து யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது குறித்த ஆலய உற்சவத்திற்கு வரும் பக்தர்கள் அனைவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளியினை பேணி வழிபாட்டினை மேற்கொள்ள ஏற்பாடுகள் பொலிசார் இராணுவத்தினர் அதேபோல் சுகாதாரப் பிரிவினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளன
அதேபோல் சுகாதார பிரிவினரால் சுகாதார நடைமுறைகள் தொடர்பான விடயங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றது மக்கள் அதனை பின்பற்றி தமது வழிபாட்டினை மேற்கொண்டு வருகின்றார்கள்
எனினும் அண்மைய நாட்களில் ஆலயத்திற்கு வரும் அடியவர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாக காணப்படுகின்றது மக்கள் இது தொடர்பில் சற்று தெளிவாக இருக்க வேண்டும் தற்போது நாட்டில் கொரோணா தொற்று சற்று தணிந்து காணப்படுகின்றது எனினும் சமூக தொற்று தொடர்பில் நாம் விழிப்பாக இருக்க வேண்டியது அவசியமாகும்
உதாரணமாக அண்மைய நாட்களில் ராஜாங்கனை பிரதேசத்தில் பாடசாலை மாணவர் ஒருவருக்கு தொற்று இனங்காணப்பட்ட விடயம் தொடர்பில் நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள்
யாழ்ப்பான மாவட்டத்தினை பொறுத்தவரைக்கும் கொரோனா தொற்று ஏற்படாவண்ணம் பாதுகாப்பு பிரிவு மற்றும் சுகாதாரப் பிரிவினரின் முயற்சியால் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றோம் மக்களின் பூரண ஒத்துழைப்புடன் அதனைச் செயற்படுத்தியுள்ளோம்
எனினும் நல்லூர் ஆலயத்தை பொறுத்தவரையில் நாட்டின் அனைத்துப் பாகங்களிலுமிருந்தும் பொதுமக்கள் ஆலய தேர் உற்சவத்தில் கலந்து கொள்வது வழமை நாட்டில் கொரோணா தொற்று அச்ச நிலைமை காணப்படுவதன் காரணமாக இம்முறை அவ்வாறு இடம்பெற அனுமதிக்க முடியாது
இம்முறை நல்லூர் ஆலய உற்சவத்தின் தேர் உற்சவம் நாளை மறுதினம் திங்கட்கிழமை இடம்பெற வுள்ளது இந்த முறை ஆலய தேர் உற்சவத்திற்கு மக்கள் அதிகளவில் வருவதை தவிர்த்து சமூகத்தொற்றிலி ருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்
யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் என்ற ரீதியில் எனக்கு ஒரு கடமையுள்ளது அதாவது சமூகத்தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எனக்குள்ளது அந்த ரீதியில் இந்த வேண்டுகோளை உங்களிடம் முன்வைக்கின்றேன்
மக்கள் நல்லூர் ஆலய தேர் உற்சவத்திற்கு அதிகளவில் வருகை தராது வீடுகளிலிருந்து தரிசியுங்கள் அது உங்கள் எதிர்காலத்திற்கு நல்லதாக அமையும் இந்த விடயத்தினை கருத்தில் கொண்டு நாளை மறுதினம் இடம்பெறும் நல்லூர் ஆலய தேர் உற்சவத்திற்கு அடியவர்கள் வீட்டில் இருந்தவாறே முருகக் கடவுளை தரிசியுங்கள் என கோரிக்கை விடுக்கின்றேன் என்றார்
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
3 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
3 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
3 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
3 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
3 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
6 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1480 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1480 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1480 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1481 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1481 Days ago