Skip to main content

கசிப்பை ஏற்றுமதி செய்ய கோரும் டயானா

Sep 28, 2023 36 views Posted By : YarlSri TV
Image

கசிப்பை ஏற்றுமதி செய்ய கோரும் டயானா 

கசிப்பை ஏற்றுமதி செய்தால் இலங்கைக்கு அதிக வருமானம் கிடைக்கும் என இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.



3600 ரூபாவிற்கு மதுபான போத்தல் ஒன்றை சாதாரண மக்கள் கொள்வனவு செய்ய முடியாத நிலை காணப்படுவதால் மாற்று வழியை அறிமுகப்படுத்த வேண்டுமெனவும், மதுபானத்தின் விலை உயர்வால் கசிப்பு உற்பத்தி 500% அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.



தற்போது பலர் வீட்டில் கசிப்பை குடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



கசிப்பு மற்றும் கஞ்சாவின் மதிப்பை மக்கள் புரிந்து கொள்ளவில்லை என்றும், ரஷ்யாவில் கசிப்புக்கு ஓட்கா என்றும் ஜப்பானில் 'சேக்' என்றும் பெயர் உள்ளதாக அவர் கூறினார்.



நல்ல தரத்தில் கசிப்பு ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தால், அந்த தொழிலில் இருந்து இந்த நாட்டுக்கு வரும் டொலர்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும் என மேலும் தெரிவித்தார்.   


Categories: இலங்கை
Image

சில சுவாரஸ்யமான செய்திகள்

தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

1 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை