வணிக வளாகத்தில் வாடிக்கையாளர்களுக்கு சானிடைசர் வழங்க ‘ரோபோ’ நாய் பயன்படுத்தப்படுகிறது.
Jun 09, 2020 243 views Posted By : YarlSri TV
வணிக வளாகத்தில் வாடிக்கையாளர்களுக்கு சானிடைசர் வழங்க ‘ரோபோ’ நாய் பயன்படுத்தப்படுகிறது.
தாய்லாந்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று ஓரளவு கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு இந்த வைரஸ் தொற்று பரவியதில் 58 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் பாங்காக் நகரில் உள்ள சென்ட்ரல் வேர்ல்ட் மால் என்ற புகழ்பெற்ற வணிக வளாகத்தில், அங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க புதுமையான தடுப்பு முறையை கையாண்டு வருகின்றனர்.இங்கு கே-9 என்ற ரோபோ நாய் மூலம், வருகிற வாடிக்கையாளர்களின் கைகளை நன்றாக சுத்தம் செய்வதற்கு சானிடைசர் திரவம் தரப்படுகிறது.இந்த ரோபோ நாய், உற்சாகமாக ஒரு அசல் நாய் போலவே வலம் வருவது, அங்கு வருகிற குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரையில் அனைவரின் கவனத்தையும் கவர்வதாக அமைந்துள்ளது.இது5ஜிதொழில்நுட்பத்தால்இயக்கப்படுகிறது.“இது, மக்கள் தங்கள் கைகளை சானிடைசர் திரவம் கொண்டு சுத்தம் செய்து விட்டு, பொருட்களை பார்த்து தெரிவு செய்வதற்கு வசதியாக உள்ளது. குறிப்பாக இப்போது கொரோனா வைரஸ் பரவி வருகிற இந்த காலகட்டத்தில் அதைத் தடுப்பதற்கு உதவும்” என்று பெட்ரா சக்திதேஜ்பானுபவந்த் என்பவர் கூறினார்.மேலும் அவர் கூறுகையில், “ இந்த ரோபோ நாயை பொறுத்தவரையில் அது மிகவும் அழகாக இருக்கிறது என்று மக்கள் நினைக்கிறார்கள்” என குறிப்பிட்டார்.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
3 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
3 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1477 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1477 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1477 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1478 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1478 Days ago