மிஸ்ட் கோலால் வந்த அறிமுகம் – யாழில் 2 யுவதிகள் கடத்தல் விவகாரத்தில் வெளிவரும் உண்மைகள்
Jun 10, 2020 371 views Posted By : YarlSri TV
மிஸ்ட் கோலால் வந்த அறிமுகம் – யாழில் 2 யுவதிகள் கடத்தல் விவகாரத்தில் வெளிவரும் உண்மைகள்
தென்மராட்சி – கொடிகாமத்தில் காதலர்கள் என்று கூறப்படும் இளைஞர்கள் இருவரை சந்திக்க வந்த பெண்கள் இருவரை, குழு ஒன்று வரணி எல்லையை ஒட்டிய மாசேரி பகுதியில் வைத்து கடத்த முயன்ற சம்பவம் நேற்று நடந்தது. இதன்போது ஒரு பெண் தப்பித்து,மக்களின் உதவியுடன் கொடிகாமம் பொலிஸில் சரணடைந்திருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய பொலிசார், கடத்தல்காரர்களுடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் ஒருவரை கைது செய்துள்ளனர்.
சுன்னாகம் பகுதியில் இருந்து பெண்கள் இருவர் கொடிகாமத்தில் உள்ள காதலர்கள் என்று கூறப்படும் இருவரை சந்திக்க வந்துள்ளனர். இதன்போது இரு பெண்களையும் கொடிகாமம் பகுதியில் இருந்து மாசேரி பகுதிக்கு அழைத்து சென்றனர். அவ்வேளை குடத்தனை பகுதியில் இருந்து வந்த இளைஞர்கள் குழுவொன்று அப்பெண்களை கடத்தி செல்ல முற்பட்ட வேளை, 16 வயதான பெண் அவலக் குரல் எழுப்பியவாறு அப்பகுதியில் தப்பி பாதுகாப்பு கோரி கொடிகாமம் பொலிஸில் சரணடைந்துள்ளார்.
இவ்வாறு சரணடைந்த பெண் பொது மக்களின் உதவியோடு பொலிசாருக்கு வழங்கிய முறைப்பாட்டையடுத்து கொடிகாமம் பொலிசாரும் பருத்தித்துறை பொலிசாரும் இணைந்து மற்றைய பெண், காதலர்கள் என்று கூறப்படும் இருவர் மற்றும் கடத்தல் சந்தேக நபர்கள் உள்ளிட்டோரை வலை வீசித் தேடி வருகின்றனர்.
சம்பவத்தில் தொடர்புடைய காதலர்கள் என்று கூறப்படும் இளைஞர்கள் இருவரும் குறித்த பெண்கள் இருவரையும் திட்டமிட்டு அழைத்து, இவ்வாறு ஏனையோருடன் இணைந்து இந்த கடத்தல் முயற்சியை மேற்கொண்டிருக்கலாம் என்று பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடத்தப்பட்டதாக கூறப்படும் யுவதி மற்றும் இளைஞர்கள் இருவர் பற்றி பொலிசார் தீவிர விசார நடத்தி வருகிறார்கள்.
யுவதியொருவரின் தொலைபேசிக்கு வந்த மிஸ் கோல் ஒன்றே, யுவதியொருவரையும், இளைஞனையும் இணைத்துள்ளது. மிஸ் கோல் அறிமுகத்தை தொடர்ந்து, இருவரும் தொடர்ந்து தொலைபேசி வழியாக பேசி உறவை வளர்த்துக் கொண்டனர். நேற்று காதலனை சந்திக்க சென்றபோதே இந்த சம்பவம் இடம்பெற்றது.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
23 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
23 Hours agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
23 Hours agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1476 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1476 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1476 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1476 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1476 Days ago