Skip to main content

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை இடம்பெற்று வருகிறது.....!

Jun 04, 2020 306 views Posted By : YarlSri TV
Image

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை இடம்பெற்று வருகிறது.....! 

யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட j 89 கிராம சேவகர் பிரிவு உதயபுரம் கிராமத்தில் தனியார் காணிகளில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு நீண்டகாலமாக இடம்பெற்று வருவதாகவும் அதனைநிறுத்துவதற்கு உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர் 



யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதி 89 உதயபுரம் கிராம பகுதியில் தனியார் காணிகளில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு நீண்டகாலமாக இடம்பெற்று வருவதாகவும் அதிலும் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நேரத்தில் மிகவும் சுதந்திரமான முறையில் மண்ணகழ்வில் ஈடுபட்டு வருவதாகவும் இதனை நிறுத்துவதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்



இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் முறையிட்டும் தமக்கு உரிய நடவடிக்கை  எடுக்கப்படவில்லையெனவும் இவ்வாறு இந்த மணல் அகழ்வு தொடர்ச்சியாகஇடம்பெற்றுவருமாக இருந்தால் கடல்நீர் கிராமத்துக்குள் புகும்  நிலை விரைவில்ஏற்படும் எனவும் எனவே இதனைக் கருத்தில் கொண்டு உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உதயபுரம் பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை