சொத்து தகராறில் மகனின் கையை வெட்டிய தந்தை!
Sep 02, 2020 242 views Posted By : YarlSri TV
சொத்து தகராறில் மகனின் கையை வெட்டிய தந்தை!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாரைக்கிணறு பகுதிக்கு உட்பட்ட சூரக்கோட்டை என்ற கிராமத்தில் கருப்பண்ணன் வசித்து வருகிறார். கூலி தொழிலாளியான இவருக்கு மணிவண்ணன் என்ற மகன் இருக்கிறார்.
இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு இருந்து வந்துள்ளது. அதன் காரணமாக அருகருகே உள்ள விவசாய நிலத்தியில் தனி தனியாக விவசாயம் செய்து வருகின்றனர். ஆனால் கடந்த ஆறு மாதமாக தந்தைக்கும் மகனுக்கும் விவசாய நிலத்தை சரியாக பங்கிடுவதில் மோதல் ஏற்பட்டு இருந்திருக்கிறது.
இந்நிலையில் இன்று மதியம் ஏற்பட்ட வாய் தகராறு முற்றி கருப்பண்ணன் தனது மகனின் இடது கையை அரிவாளால் வெட்டியுள்ளார்.
இரத்த வெள்ளத்துடன் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மணிவண்ணனிடம் ஆயில்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1486 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1486 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1486 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1486 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1486 Days ago