Skip to main content

அறிவிப்பாளராக மாறிய முன்னால் ஜனாதிபதி..!

May 23, 2020 358 views Posted By : YarlSri TV
Image

அறிவிப்பாளராக மாறிய முன்னால் ஜனாதிபதி..! 

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனியார் சிங்கள வானொலி ஒன்றில் அறிவிப்பாளராக செயலாற்றி கருத்துக்களை வெளியிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



கொழும்பிலுள்ள தனியார் வானொலியில் இன்று காலை செய்தி வாசிப்பாளர் ஆசனத்தில் அமர்ந்து செய்திகளை வாசித்த அவர், அதன் பின்னர் அறிப்பாளராக வானொலியும் நானும் எனும் தலைப்பில் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார்.



மைத்திரி மீது கடும் விமர்சனங்களும், கண்டனங்களும் சமூக ஊடகங்களில் வலுத்து வந்த நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையில் அவர் இவ்வாறு செயற்பட்டுள்ளார்.



இதனால் மக்கள் மத்தியில் இவரது குரல் பதிவுகள் வைரலாகப் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை