அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் திடீர் முடிவு...!
May 29, 2020 290 views Posted By : YarlSri TV
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் திடீர் முடிவு...!
அனைத்து சமூக ஊடகங்களையும் முடக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மிரட்டியுள்ளார்.
சமூக ஊடகங்கள் குறித்த நிர்வாக உத்தரவு ஒன்றில் கையெழுத்திட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அஞ்சல் வழி அனுப்பப்படும் வாக்குகள் தேர்தலை நம்பகமற்ற ஒன்றாக மாற்றிவிடும் என்று Twitterஇல் அவர் செய்த பதிவுகள் இரண்டை Twitter திருத்தம் செய்தது.
அவரின் கருத்துக்கு ஆதாரமில்லை என்றும் சரியான தகவலைப் பெறுவதற்கான இணைப்பும் திருத்தங்களில் இடம்பெற்றன.
அந்தத் தளத்தில் சுமார் 80 மில்லியன் ரசிகர்களைக் கொண்ட அதிபரின் தவறான பதிவுகளைப் பல ஆண்டுகளாகத் திருத்தாமல் இருந்த நிறுவனத்தைப் பலர் குறைகூறியுள்ளனர்.
தம் அரசியல் உரிமைகள் பறிக்கப்படுவதாக மீண்டும் Twitterஇல் பதிவு செய்தார் ட்ரம்ப்.
அதனைத் தொடர்ந்து Facebook நிறுவனத்தின் தலைவர், தனியார் நிறுவனங்கள், மற்றவர்களின் கருத்துகள் குறித்துத் தீர்ப்பளிப்பது சரியல்ல என்று கருத்துரைத்தார்.
அதற்குப் பதிலளித்த Twitterஇன் தலைமை நிர்வாக அதிகாரி Jack Dorsey தம் நிறுவனத்தின் நிலைப்பாட்டைத் தற்காத்துப் பேசினார்.
தவறான தகவல்களைப் பயனீட்டாளர்களுக்குச் சுட்டிக் காட்டுவதே தங்கள் நோக்கம் என்றார் அவர்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 130 பேர் கைது!
-
இன்று செவ்வாய்க்கிழமை 230 நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் இடம்பெற்றுள்ளது!
-
தலைமன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்து சென்று தெலுங்கானாவைச் சேர்ந்த 48 வயதான பெண் ஆசிரியர் சாதனை படைத்துள்ளார். தலைமன்னாரில் இருந்து நேற்று (19) அதிகாலை 4 மணி 10 நிமிடத்தில் அவரது நீச்சல் ஆரம்பமாகி நேற்று (19) மாலை 5 மணி 50 நிமிடங்களுக்கு நிறைவு செய்தார். தமிழகத்தையும், இலங்கையையும் பாக் ஜலசந்தி கடற்பகுதி பிரிக்கிறது. ராமேஸ்வரம் தீவும், அதை தொடர்ந்துள்ள மணல் திட்டுக்களான ராமர் பாலமும் பாக்ஜலசந்தி கடற்பகுதியை மன்னார் வளைகுடாவில் இருந்து பிரிக்கிறது. தமிழகத்திலேயே மிகவும் ஆழம் குறைந்த, அதே சமயம் பாறைகளும் ஆபத்தான ஜெல்லி மீன்களும் நிறைந்த கடற்பகுதி இது. பாக் ஜலசந்தி கடற்பகுதியை இலங்கை வல்வெட்டித்துறையை சேர்ந்த நவரத்தினசாமி என்ற தமிழர் முதன் முதலாக 1954ஆம் ஆண்டு நீந்திக் கடந்தார். தொடர்ந்து 1966 ஆம் ஆண்டு கொல்கத்தாவை சேர்ந்த மிகிர்சென் என்பவர் பாக் ஜலசந்தியை தலை மன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரை நீந்திக் கடந்தார். வல்வெட்டித்துறையை சேர்ந்த நீச்சல் வீரரான குமார் ஆனந்தன் 1971 ஆம் ஆண்டு தலைமன்னாரில் இருந்து தனுஸ் கோடிக்கு நீந்தி வந்து, மீண்டும் தலைமன்னாருக்கு 51 மணி நேரத்தில் நீந்திச் சென்று சாதனை படைத்தார். இந்நிலையில், பல்வேறு நீச்சல்போட்டிகளில் சாதனை படைத்த தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த சியாமளா கோலி (வயது-48), தலைமன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரையிலான சுமார் 30 கி.மீ. தூரம் கொண்ட பாக் ஜலசந்தி கடற்பகுதியை நீந்தி சாதனை படைத்தார். தலைமன்னாரில் நேற்று (19) அதிகாலை 4 மணி 10 நிமிடத்தில் அவரது நீச்சல் ஆரம்பமானது. சியாமளா கோலி 30 கி.மீ தூரத்தை தனுஸ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு நேற்று (19) மாலை 5 மணி 50 நிமிடங்களுக்கு சுமார் 13 மணி 40 நிமிட நேரத்தில் சென்றடைந்தார். இதன் மூலம் பாக் ஜலசந்தியை நீந்தி கடந்த 13ஆவது நீச்சல் வீரராகவும் உலகளவில் இரண்டாவது வீராங்கனையாகவும், இந்திய அளவில் முதல் வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார். கடந்த ஆண்டு பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடப்பதற்கு இந்திய-இலங்கை அரசுகளிடம் அனுமதி கிடைத்தது. ஆனால் கொரோனா பரவல் காரணத்தினால் முடியாமல் போனது. பாக் ஜலசந்தியை பெண்ணாக நான் நீந்தி கடந்ததன் மூலம் பெண்களால் அனைத்து சாதனைகளையும், உயர்ந்த இலக்குகளை அடைவதற்கு நம்பிக்கை அளிக்கக் கூடியதாகவும் இருக்கும் என தலைமன்னார் முதல் தனுஸ்கோடி வரையிலான கடலை நீந்தி கடந்த சியாமளா கோலி தெரிவித்தார்!
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1488 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1488 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1488 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1489 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1489 Days ago