Skip to main content

உள்நாட்டு மீனவர்களையும் உள்நாட்டு வளங்களையும் பாதுகாக்க ஜனாதிபதி நடவடிக்கை!

Jan 18, 2024 38 views Posted By : YarlSri TV
Image

உள்நாட்டு மீனவர்களையும் உள்நாட்டு வளங்களையும் பாதுகாக்க ஜனாதிபதி நடவடிக்கை! 

இந்திய மீனவர்களின் வருகையினால் எமது மீனவர்களுக்கு ஏற்பட்ட அழிவுகளுக்கு இது வரை இழப்பீடுகள் வழங்காத நிலையில் மீனவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.எனவே  உள்நாட்டு மீனவர்களையும் உள்நாட்டு வளங்களையும் பாதுகாக்க ஜனாதிபதி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்கத்தின் செயலாளரும், வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளருமான என்.எம். ஆலம் தெரிவித்தார்.



மன்னாரில் இன்று வியாழக்கிழமை(18) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.



அவர் மேலும் தெரிவிக்கையில்,,,



இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகை கடந்த 15 வருடங்களுக்கு மேலாக அதாவது யுத்தத்திற்கு முன்பும் சரி தற்போது தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.



எனினும் இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகையை கட்டுப்படுத்த முடியவில்லை என்பதை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.



இந்திய மீனவர்களின் வருகையை கட்டுப்படுத்த ஏன் அரசாங்கம் தவற விடுகின்றது  என்ற கேள்வி மன்னார் மாவட்ட மீனவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.



கண்துடைப்புக்காக பாதிக்கப்பட்ட எமது மீனவர்கள் முறைப்பாட்டை வைக்கின்ற போது ஒரு சில படகுகளை கைது செய்கின்றனர்.எனினும் தொடர்ச்சியாக இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகையும்,ஏனைய செயற்பாடுகளினால் வட பகுதி மீனவர்கள் தொழில் இழப்பை சந்திப்பதோடு,மீன்பிடி உடமைகளையும் இழந்து வருகின்றனர்.இலங்கை அரசும் கண்டுகொள்ளாமல் இருக்கின்றது.



குறுகிய எல்லைப் பரப்பை பாதுகாக்க முடியாமல் இருக்கின்ற இந்த அரசாங்கம் வெறுமனே எங்களுக்கு அப்பால் இருக்கின்ற கடல் பிரதேசத்தையும் கடல் வணிக நடவடிக்கைகளையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.



சம்மந்தமே இல்லாத நாடுகளுக்கு திட்டங்களையும் நிதியுதவிகளையும் வழங்க வாக்குறுதி வழங்கியுள்ளனர்.



ஆனால் அழிக்கப்பட்ட வடமாகாணம் எவ்வித நிதி வசதியும் இல்லாமல் அங்குள்ள பாடசாலைகளில் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் எவ்வித தொழில் நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியாத நிலையில் சம்மந்தமே இல்லாத நாடுகளுக்கு உதவிகளை மேற் கொள்ள ஜனாதிபதி நடவடிக்கைகளை மேற் கொள்ளுவதை ஒரு வகையில் நாங்கள் பாராட்டினாலும்,எமது பிரச்சினைகளை தீர்த்து வைத்ததன் பின்னர் அதனை அவர் முன்னெடுக்க வேண்டும்.



இந்திய மீனவர்களின் வருகையினால் எமது மீனவர்களுக்கு ஏற்பட்ட அழிவுகளுக்கு இது வரை இழப்பீடுகள் வழங்காத நிலையில் மீனவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வரும் நிலையில், உள்நாட்டு மீனவர்களையும், உள்நாட்டு வளங்களையும் பாதுகாக்க ஜனாதிபதி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

2 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

2 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

2 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

2 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

2 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

5 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை