பிறந்து 10 நாட்களான சிசுவுக்கு சிகிச்சையளிக்க மறுத்த தாதியர்கள்
Aug 15, 2023 66 views Posted By : YarlSri TV
பிறந்து 10 நாட்களான சிசுவுக்கு சிகிச்சையளிக்க மறுத்த தாதியர்கள்
பிறந்து 10 நாட்களான சிசுவுக்கு சிகிச்சையளிக்க முடியாது என தாதியர்கள் தெரிவித்த சம்பவமொன்று வவுனியா பொது வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது.
கடந்த 4ம்திகதி வவுனியா பொது வைத்தியசாலைக்கு மகப்பேறுக்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கும் அவருக்கு பிறந்து 10 நாட்களாகன சிசுவுக்கும் தாதியர் ஒருவருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக சிகிச்சையளிக்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலையின் 7 ஆம் விடுதி குழந்தைகள் பிரிவில் உள்ள தாதியர்கள், தலைமை தாதியர் மற்றும் பயிற்சியில் உள்ள வைத்தியர் "உங்கள் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க முடியாது" எனக் அப் பெண்ணின் கணவருக்கு கூறியுள்ளார்.
உங்களால் சிகிச்சை அளிக்க முடியாது எனில் லாமா(Lama) முறை அடிப்படையில் அந்தப்பெண்ணின் கணவர் தம்மை விடுவிக்குமாறு கோரியுள்ளார்.
அதன் போது விடுகைப்பத்திரத்தில் 12.08.2023 அன்று இரவு 10 மணியளவில் கையெழுத்து இட்ட பிற்பாடும் அடுத்த நாள் மாலை 3 மணிவரை சிகிச்சையும் அளிக்காமல் தாய் சேய் இருவரையும் விடுதியிலேயே வைத்துள்ளனர்.
இதனை வவுனியா வைத்தியசாலை பணிப்பாளரது கவனத்திற்கு கொண்டு சென்றும் அலட்சியப்போக்குடன் செயற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தாதியர்கள் 13.08.2023 அன்று மதிய நேரம் தாய்க்குரிய மருந்து வில்லைகளையும் வழங்க மறுத்துள்ளனர்.
அப் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை கிடைத்ததோடு வில்லைகளை வழங்காது விட்டதால் வலியால் பெரும் அவஸ்தை உற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்த நிலையில் கடும் விமர்சனம் எழுந்துள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago