சிம்பாப்வே இலங்கை அணிகளுக்கிடையிலான போட்டியில் : தொடரை வென்றது இலங்கை அணி!
Jan 12, 2024 44 views Posted By : YarlSri TV
சிம்பாப்வே இலங்கை அணிகளுக்கிடையிலான போட்டியில் : தொடரை வென்றது இலங்கை அணி!
இலங்கை வந்த சிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது
வனிந்து ஹசரங்கவின் சுழலில் சிக்கி சின்னாபின்னமான சிம்பாப்வே அணி படுதோல்வியடைந்த நிலையில் இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.
கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக இந்த போட்டி நேற்று இடம்பெற்றது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 22.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 96 ஓட்டங்களை மாத்திரமே பெற்றகொண்டது .
ஹசரங்க வீசிய பந்தின் மாயாஜாலம்
சிம்பாப்வே அணி சார்பில் Joylord Gumbie அதிகபட்சமாக 29 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் வனிந்து ஹசரங்க 7 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.போட்டியில் அடிக்கடி மழை குறுக்கிட்டதால் இலங்கை அணிக்கு 27 ஓவர்களில் 97 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
மழை குறுக்கிட்டதால் குறைக்கப்பட ஓவர்
அதன்படி, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 16.4 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இலங்கை அணி சார்பில் அணித்தலைவர் குசல் மென்டிஸ் ஆட்டமிழக்காது 66 ஓட்டங்களைப் அணிக்காக பெற்றுக் கொண்டார்.
போட்டியின் ஆட்டநாயகனாக ஹசரங்க
இந்த போட்டித் தொடரில் முதலாவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டிருந்த நிலையில் இரண்டாது மற்றும் மூன்றாவது போட்டிகளில் வெற்றி பெற்று இலங்கை அணி தொடரை கைப்பற்றியுள்ளது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
4 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
4 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
4 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
4 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
4 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1482 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1482 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1482 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1483 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1483 Days ago