Skip to main content

வடமராட்சி கிழக்கு ஊடகவியலாளருக்கு கடும் தொனியில் எச்சரிக்கை விட்ட நபர்

Oct 01, 2023 28 views Posted By : YarlSri TV
Image

வடமராட்சி கிழக்கு ஊடகவியலாளருக்கு கடும் தொனியில் எச்சரிக்கை விட்ட நபர் 

உடுத்துறையில் அண்மையில்  பாடசாலை மாணவன் தாக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.



மாணவிக்கு மாணவன் பாடசாலையில் சொக்லேட் கொடுக்க முனைந்த போது மாணவியின் அண்ணனால் மாணவன் பாடசாலைக்கு வெளியே தாக்கப்பட்டார்.



பலத்த காயங்களுக்குள்ளான மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் பின் விடுவிக்கப்பட்டார்.



மாணவன் மாணவியிடம்  மூன்று முறை இவ்வாறு நடந்து கொண்டதாகவும்,

அவருக்கு மனநோய் இருப்பதாகவும் தெரியவந்தது.



சம்பவம் தொடர்பாக பாடசாலை நிர்வாகத்தை சுட்டிக்காட்டி வடமராட்சி கிழக்கு ஊடகவியலாளர் ஒருவரால் செய்தி வெளிக் கொண்டுவரப்பட்டது.



இந்நிலையில் தன்னை அரசியல்வாதி எனக் கூறிக் கொள்ளும் வடமராட்சி கிழக்கை சேர்ந்த நபர் ஒருவர் குறித்த ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.



தான் பழைய மாணவன் என்றும்,பாடசாலையின் பெயரை பாவிப்பதை இத்தோடு நிறுத்தவேண்டுமெனவும் குறித்த ஊடகவியலாளருக்கு கடும் தொனியில் அவர் எச்சரிக்கை விடுத்த குரல் பதிவுகளும் வெளியாகி உள்ளன.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

2 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை