சத்திரகிசிச்சைகளை பிற்போடவேண்டிய நிலையில் வைத்தியசாலைகள் - அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம்
Sep 15, 2022 88 views Posted By : YarlSri TV
சத்திரகிசிச்சைகளை பிற்போடவேண்டிய நிலையில் வைத்தியசாலைகள் - அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம்
எதிர்காலத்தில் அவசர சத்திரசிகிச்சைகளிற்கு தேவையான மருத்துவ உபகரணங்களை சேமிப்பதற்காக வழமையான சத்திரகிசிச்சைகளை ஒத்திவைக்கவேண்டிய நிலை உருவாகியுள்ளதாக அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே இதனை தெரிவித்துள்ளார்.எஞ்சியிருக்கின்ற மருந்துகளையும் மருத்துவ உபகரணங்களையும் இருதய சத்திரகிசிச்சை போன்ற உயிர்காக்கும் சத்திரகிசிச்சைகளிற்காக பத்திரப்படுத்தவேண்டியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். மயக்க மருந்து தொடர்புடைய மருத்துவ உபகரணங்கள் ,அன்டிபயோட்டிக்ஸ்,கடுமையான சூழ்நிலைகளை கையாள்வதற்கான மருந்துகள் போன்றவை பற்றாக்குறையாக காணப்படுவதால் வழக்கமான மருத்துவ நடவடிக்கைகளில் தாமதம் ஏற்படுகின்றது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆறு மாதங்களிற்கு முன்னரே இந்த வழமையான சத்திரகிசிச்சைகளிற்கு மருத்துவர்கள் அனுமதிவழங்கிவிட்டனர்,உரியநேரத்தில் சத்திரகிசிச்சை இடம்பெறும்என்ற நம்பிக்கையுடன் நோயாளிகள் உள்ளனர் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.
எனினும் தற்போதைய மருந்து மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை காரணமாக நோயாளிகளிற்கு சத்திரகிசிச்சைகளை மேற்கொள்ளாமல் வைத்தியசாலைகள் திருப்பிஅனுப்பிவிட்டன என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கவேண்டியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வரவு செலவு திட்டத்தில் புற்றுநோய் மருந்துகளிற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது ஆனால் அந்த மருந்துகள் இறக்குமதி செய்யப்படுமா என்பது தெரியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
11 Hours agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
11 Hours agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
11 Hours agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
11 Hours agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
11 Hours agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
11 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
3 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
3 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1478 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago