Skip to main content

11 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்

Sep 14, 2023 30 views Posted By : YarlSri TV
Image

11 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் 

குருணாகல் நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் ஐந்தாம் ஆண்டில் கல்வி  கற்கும் பதினொரு  மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.



பொத்துஹெர பிரதேசத்தில் வசிக்கும் ஐம்பத்தைந்து வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஆசிரியரே  பெற்றோர்கள் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில்  கைது செய்யப்பட்டுள்ளார்.



சந்தேக நபர் தனது பாடத்தை கற்பிக்கும்போது வகுப்பில் உள்ள  மாணவிகளின்  உடலை தொட்டு, அழுத்தி, அந்தரங்க உறுப்புகளை தொட்டு துஷ்பிரயோகம் செய்ததாகவும் கூறப்படுகிறது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை