Skip to main content

மட்டக்களப்பு வாவியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

Dec 15, 2023 33 views Posted By : YarlSri TV
Image

மட்டக்களப்பு வாவியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு! 

மட்டக்களப்பு வாவியல் இருந்து மெனிங் ரைவர் வீதியில் பகுதி வாவி கரையில் உயிரிழந்த நிலையில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் நேற்றிரவு 7 மணிக்கு மீட்க்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.



குறித்த வாவியில் சம்பவ தினமான இரவு மீன்பிடியில்  ஈடுபட்டுக் கொண்டிருந்த மீனவர் ஒருவரின் வலையில் சடலம் ஒன்று சிக்கிய நிலையில் அவர் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.



இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்ததுடன் தடயவியல் பொலிஸ் பிரிவினர் அழைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த நபர் 60 வயதுக்கு மேற்பட்டவர் எனவும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.



இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை