Skip to main content

புத்தளத்தில் தாவணியுடன் தப்பிய திருடன்

Nov 05, 2023 18 views Posted By : YarlSri TV
Image

புத்தளத்தில் தாவணியுடன் தப்பிய திருடன் 

கிராமத்தில் யாருமே இல்லாத வீடொன்றில் திருட வந்த 35 வயது மதிக்கத்தக்க திருடன் ஒருவன் அந்த வீட்டில் படுத்துறங்கியதுடன் வீட்டிலிருந்த தாவணியுடன் தப்பியோடிய விசித்திரமான சம்பவம் ஒன்று பாலாவி முல்லை ஸ்கீம் கிராமத்தில்  இன்று இடம்பெற்றுள்ளது.



அதிகாலை முல்லை ஸ்கீம் பகுதியில் நடமாடிய நிலையில் அப் பகுதியில் பொலிஸாரின் வாகனமொன்று வருவதை கண்டு முல்லை ஸ்கீம் கிராமத்தில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்துள்ளார் எனக் அறியப்படுகிறது.



குறித்த வீட்டிற்குள் அந்த வேளை யாருமே இருக்காத நிலையில் வீட்டின் சமையலறை ஊடாக நுழைந்த குறித்த திருடன் குப்பி விளக்கொன்றினை ஏற்றி வெளிச்சத்தை வரவைத்துள்ளதுடன் வீட்டிலிருந்த நுளம்பு வலையை எடுத்து தூங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். அந்த வீட்டில் இருந்த துணிகளை எடுத்து தலையணைக்காகவும்  பயன்படுத்தியுள்ளார்.



இந்நிலையில், இன்று காலை 8 மணியளவில் திருடன் தங்கியிருந்த வீட்டில் சத்தம் ஒன்று கேட்டபோது, யாருமில்லாத வீட்டிலிருந்து சத்தம் வருவதை அயலிலுள்ளவர்கள் அறிந்து. இது தொடர்பில் வீட்டின் உரிமையாளருக்கு தொலைபேசி ஊடாக தகவல் வழங்கியுள்ளதுடன், ஏனையோருக்கும் தெரியப்படுத்தியுள்ளனர்.



இதனை அவதானித்த திருடன் தான் அணிந்து வந்த ஆடைகளை கழற்றிவிட்டு வீட்டிலிருந்த பெண்கள் அணியும் தாவணி ஒன்றை உடுத்திய நிலையிலேயே அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை