மாமனாரை கோடாரியால் தாக்குதல் நடத்திய மருமகன் உட்பட மேலும் பலர் கைது
Apr 06, 2023 59 views Posted By : YarlSri TV
மாமனாரை கோடாரியால் தாக்குதல் நடத்திய மருமகன் உட்பட மேலும் பலர் கைது
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள வெவ்வேறு பிரதேசங்களில் வெவ்வேறு சம்பவங்களுடன் தொடர்புடைய 3 பேரை நேற்றுஎஇரவு கைது செய்துள்ளாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஊறணியிலுள்ள கொத்துக்குளத்து மாரியம்மன் ஆலயத்தினுள் நேற்று இரவு 10 மணியளவில் நுழைந்த நாவற்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞன், அங்கு கோபுர கட்டிட புனரமைப்பிற்காக வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பிகளை திருடிக் கொண்டு இருந்தபோது பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.
இதேவேளை, சீலாமுனை பகுதியில் துவிச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கூளாவடி பிரதேசத்தைச் சோந்த 60 வயதுடைய ஒருவரை கைது செய்ததுடன் அவரிடமிருந்து திருடப்பட்ட 2 துவிச்சக்கர வண்டிகளை பொலிஸார் மீட்டனர்.
இதேவேளை புதூர் பிரதேசத்தில் கடந்த மாதம் 4ம் திகதி மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் காரியாலயத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்ற 65 வயதுடைய மாமனாரை கோடாரியால் தாக்குதல் நடத்திவிட்டு தலைமறைவாகி வந்த 44 வயதுடைய மருமகனை பொலிஸார் கைது செய்தனர்.
இந்த சம்பவங்களில் கைது செய்யப்பட்ட 3 பேரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1491 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1491 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1491 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago