தலீபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அரசு சார்பு போராளிகள் 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்!
Aug 21, 2020 285 views Posted By : YarlSri TV
தலீபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அரசு சார்பு போராளிகள் 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்!
ஆப்கானிஸ்தானில் 19 ஆண்டுகளுக்கு மேலாக தலீபான் பயங்கரவாதிகளுக்கும் அந்த நாட்டு அரசுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது.
தலீபான் பயங்கரவாதிகளின் கொட்டத்தை ஒடுக்க அந்த நாட்டு ராணுவம் கடுமையாக போராடி வருகிறது.
அதேசமயம் தலீபான்களின் ஆதிக்கம் மிகுந்த பல மாகாணங்களில் பொதுமக்களில் ஒரு பிரிவினர் போராளிகளாக மாறி அரசுக்கு ஆதரவாக தலீபான் பயங்கரவாதிகளின் சண்டையிட்டு வருகின்றனர்.
ஆயுதம் ஏந்திய அரசு சார்பு போராளிகளுக்கும் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே அவ்வப்போது பயங்கர மோதல் சம்பவங்கள் ஏற்படுகின்றன.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் வடகிழக்கு பகுதியில் உள்ள தாக்கர் மாகாணத்தில் லால குஷார் என்ற இடத்தில் அரசு சார்பு போராளிகளை குறி வைத்து தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து போராளிகள் தங்களது துப்பாக்கிகளால் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் இடையே பல மணி நேரமாக கடுமையான துப்பாக்கி சண்டை நீடித்தது.
எனினும் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் அரசு சார்பு போராளிகள் 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பல போராளிகள் படுகாயமடைந்தனர்.
இந்த மோதலில் தலீபான் பயங்கரவாதிகள் தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. எனினும் எத்தனை பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறித்த உறுதியான தகவல் இல்லை.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1488 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1488 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1488 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1489 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1489 Days ago