Skip to main content

ஐ.நா. கூட்டத்தில் ‘கைலாசா’ பிரதிநிதிகள் பங்கேற்றது எப்படி?

Mar 02, 2023 91 views Posted By : YarlSri TV
Image

ஐ.நா. கூட்டத்தில் ‘கைலாசா’ பிரதிநிதிகள் பங்கேற்றது எப்படி? 

ஜெனிவாவில் உள்ளஐ.நா மனித உரிமைகள் அமைப்பு, தங்கள் கூட்டத்தில் எந்த அமைப்பை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை பேசஅனுமதிக்கிறது. 



இதை பயன்படுத்தி கைலாசாவை ஐ.நா அங்கீகரித்தது போல் பொய்யான தோற்றத்தை நித்தியானந்தா ஏற்படுத்தியுள்ளார்.



பாலியல் புகாரில் சிக்கிய சாமியார் நித்தியானந்தா இந்தியாவை விட்டு தப்பிச் சென்று   ‘கைலாசா’ என்ற தனி நாட்டை உருவாக்கியுள்ளதாக கூறி வருகிறார். 



இந்நிலையில் ஜெனிவாவில் கடந்த மாதம் 24-ம் திகதி ஐ.நா அமைப்பின் பொருளாதார, சமூக, மற்றும் காலாச்சார உரிமைகள் குழு கூட்டம் நடந்துள்ளது. இதில் ‘கைலாசா குடியரசு’ சார்பில் நித்தியானந்தாவின் பிரதிநிதிகளாக பெண்கள் சிலர் கலந்துகொண்டனர். 



இந்த போட்டோக்கள் நித்தியானந்தாவின் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு கைலாசாவை ஐ.நா அங்கீகரித்தது போல் பொய்யான தோற்றத்தை உருவாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை