நினைவுத் தூபி அமைப்புக்காக முள்ளிவாய்க்கால் மண்ணில் யாழ். பல்கலை மாணவர்கள் மண் சேகரித்தனர்
Feb 06, 2021 186 views Posted By : YarlSri TV
நினைவுத் தூபி அமைப்புக்காக முள்ளிவாய்க்கால் மண்ணில் யாழ். பல்கலை மாணவர்கள் மண் சேகரித்தனர்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மீள அமைக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்காக முள்ளிவாய்க்கால் மண்ணிலிருந்து மண் சேகரிக்கப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இவ்வாறு மண் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
பொத்துவில் முதல் பொலிகண்டிப் போராட்டம் இன்று முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் நினைவுத் திடல் வரை சென்றதுடன் போரில் உயிரிழந்த தமிழ் மக்களுக்காக அங்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், நினைவிடத்தின் மண், மாணவர்களால் சேகரிக்கப்பட்டதுடன் இதில், வேலன் சுவாமிகள், கிறிஸ்தவ மதகுரு லியோ ஆம்ஸ்ரோங் மற்றும் சிலர் கலந்துகொண்டனர்.
யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அண்மையில் இடித்தழிக்கப்பட்ட நிலையில், கடும் எதிர்ப்பலையையடுத்து குறித்த இடத்தில் மீண்டும் அதே நினைவுத் தூபி அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1471 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1471 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1471 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1471 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1471 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1471 Days ago