தருமபுரி மாவட்டங்களில் ஜல்ஜீவன் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
Dec 27, 2022 78 views Posted By : YarlSri TV
தருமபுரி மாவட்டங்களில் ஜல்ஜீவன் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
நிலுவையிலுள்ள சான்றிதழ்களை தாமதமின்றி வழங்க வேண்டும். பட்டா மாறுதலில் பொதுமக்களுக்கு சிரமம் இன்றி சேவை வழங்கப்பட வேண்டும்.
நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, உள்துறை, போக்குவரத்து ஆகிய துறைகளின் முக்கியத் திட்டங்கள், அறிவிப்புகள், பணிகளின் முன்னேற்றங்கள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆய்வு மேற்கொண்டார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய முதலமைச்சர் சாதிச் சான்றிதழ், வசிப்பிட சான்றிதழ், வருவாய் சான்றிதழ், வாரிசு சான்றிதழ் போன்ற நிலுவையிலுள்ள சான்றிதழ்களை ஒருமாத காலத்திற்குள், தாமதமின்றி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தஞ்சாவூர், கோயம்புத்தூர், மதுரை மாவட்டங்களில் பட்டா மாறுதலில் பொதுமக்களுக்கு எவ்வித சிரமமும் இன்றி சேவை வழங்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். வேலூர், தருமபுரி, மதுரை ஆகிய மாவட்டங்களில் வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் ஜல்ஜீவன் திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார். மழைநீர் வடிகால், பாதாள சாக்கடைத் திட்டங்கள், சாலை மேம்பாட்டுப் பணிகள், நகர்ப்புற மேம்பாட்டுப் பணிகள் குறித்தும் அவர் ஆய்வு மேற்கொண்டார். பேருந்து சேவைகள் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு குறையாமல் இயக்கப்பட வேண்டும், குறைவாக பேருந்துகள் இயக்கப்பட்டால் காரணங்களை கண்டறிந்து உடனடியாக களைய வேண்டும் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1472 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1472 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1472 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1472 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1473 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1473 Days ago