Skip to main content

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களே 3வது அலையில் இறக்கும் நிலை உள்ளது

Jan 22, 2022 74 views Posted By : YarlSri TV
Image

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களே 3வது அலையில் இறக்கும் நிலை உள்ளது  

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களே 3வது அலையில் அதிகமாக இறக்கும் நிலை உள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.



சென்னை ஐஐடி வளாகத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை பார்வையிட்ட பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஊடகங்களுக்கு  தெரிவித்துள்ளார் 

அப்போது பேசிய அவர், சென்னையில் 94.19 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.74.11 சதவீதம் பேர் 2 தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் என்று குறிப்பிட்டார்.



21 மாநகராட்சியில் 100 சதவீதம் தடுப்பூசி திட்டம் வெற்றி பெற்றுள்ளது. 2,580 ஊராட்சிகளில் 100 சதவீதம் ஒரு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சென்னையில் 38,850 பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை