நேபாளத்தில் ஆற்றில் பஸ் கவிழ்ந்து 8 பயணிகள் உயிரிழப்பு: 15 பேர் காயம்.
Aug 23, 2023 46 views Posted By : YarlSri TV
நேபாளத்தில் ஆற்றில் பஸ் கவிழ்ந்து 8 பயணிகள் உயிரிழப்பு: 15 பேர் காயம்.
நேபாளத்தில் ஆற்றில் பஸ் கவிழ்ந்து 8 பயணிகள் உயிரிழந்துள்ளனர். 15 பேர் காயமடைந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். காத்மண்டு, நேபாளத்தின் காத்மண்டு நகரில் இருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள பெனி-ஹில்லி மாவட்டத்தில் உள்ள பகுதியை நோக்கி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் காத்மண்டுவில் இருந்து 60 கி.மீ. தொலைவில் தடிங் மாவட்டத்தில் கஜுரி பகுதியருகே சென்றபோது பஸ் அருகேயுள்ள திரிசூலி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் பஸ்சின் ஒரு பகுதி நீரில் மூழ்கியது. இந்த விபத்தில் சிக்கி பயணிகள் 8 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ பகுதிக்கு சென்ற மீட்பு குழுவினர் மற்றும் உள்ளூர்வாசிகள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர்களில் 2 பேர் பெண்கள் மற்றும் 6 பேர் ஆண்கள் ஆவர். அவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.
காத்மாண்டுவில் இருந்து இயற்கை எழில் கொஞ்சும் நகரமான பொக்ராவுக்கு சென்று கொண்டிருந்த பேருந்து, தாடிங் மாவட்டத்தில் உள்ள சாலிஸ் என்ற இடத்தில் திரிசூலி ஆற்றில் கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டது. நேபாளத்தின் பாக்மதி மாகாணத்தில் பயணிகள் பேருந்து ஒன்று பிரதான நெடுஞ்சாலையில் இருந்து சறுக்கி வீங்கிய ஆற்றில் விழுந்ததில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 15 பேர் காயமடைந்ததாக தகவல் தெரிவித்துள்ளனர்.
பெரும்பாலும் மலைகளால் சூழப்பட்டிருக்கும் நேபாளத்தில் நெடுஞ்சாலை விபத்துக்கள் பெரும்பாலும் மோசமாகப் பராமரிக்கப்படும் வாகனங்கள் மற்றும் சாலைகளால் ஏற்படுகின்றன.காத்மாண்டுவில் இருந்து இயற்கை எழில் சூழ்ந்த நகரமான பொக்காராவுக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து, மாகாணத்தின் தாடிங் மாவட்டத்தில் உள்ள சாலிஸ் என்ற இடத்தில் உள்ள திரிசூலி ஆற்றில் கவிழ்ந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்தில் 8 பேர் பலியாகியுள்ளனர், மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. விபத்துக்குப் பிறகு பேருந்து திரிசூலி ஆற்றில் ஓரளவு மூழ்கியதாகவும், ஆனால் மீட்புப் பணியாளர்கள் பல பயணிகளை இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்க முடிந்தது என்றும் தெரிவித்துள்ளனர். பருவமழை காலத்தில் பெய்த தொடர் மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
16 Hours agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
16 Hours agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
16 Hours agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
16 Hours agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
16 Hours agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
16 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago