Skip to main content

மத்திய வங்கியின் உயர் பாதுகாப்பிலிருந்து பணம் மாயம்

Apr 20, 2023 56 views Posted By : YarlSri TV
Image

மத்திய வங்கியின் உயர் பாதுகாப்பிலிருந்து பணம் மாயம் 

மத்திய வங்கியின் உயர் பாதுகாப்பிலிருந்து 5 மில்லியன் ரூபா காணாமல் போனமை தொடர்பில் இலங்கை மத்திய வங்கி இன்று (20) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.



அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,



2023.04.11 அன்று நாணயச் செயற்பாடுகளின் போது இலங்கை மத்திய வங்கியின் பெட்டகத்தில் 5 மில்லியன் ரூபா பெறுமதியான 5,000 ரூபா நாணயத்தாள்கள் காணால் போனமை கண்டறியப்பட்டுள்ளது.



இந்த விடயம் சம்பந்தமாக உள்ளக ஆய்வுகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்ட அதேவேளை, கோட்டை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டு, பொலிஸ் விசாரணைகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.



இந்த விடயத்தை முழுமையாக விசாரணை செய்வதற்கும் மற்றும் உள்ளகக் கட்டுப்பாடுகள், செயன்முறைகள் மற்றும் ஏனைய செயற்பாடுகளை வலுப்படுத்துவதற்கும் அவசியமான வழிமுறைகளை இலங்கை மத்திய வங்கி எடுத்து வருகின்றது என அறிவிக்கப்பட்டுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை