நியூசிலாந்து கிரிக்கெட்டை விட நாமே பணக்காரர் - இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வா
Sep 16, 2022 66 views Posted By : YarlSri TV
நியூசிலாந்து கிரிக்கெட்டை விட நாமே பணக்காரர் - இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வா
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தற்போது நியூசிலாந்து கிரிக்கெட்டை விட பணக்காரர்களாக உள்ளது என அதன் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்தார்.
இலங்கை கிரிக்கெட்டின் நிலையான வைப்புத்தொகை தற்போது 40 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் காணப்படுகின்றது. இது கடந்த 2 - 3 வருடங்களாக தற்போதைய நிர்வாகத்தால் சேகரிக்கப்பட்டுள்ளது எனவும் ஷம்மி சில்வா தெரிவித்தார்.
இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா மேலும் கூறுகையில்
தற்போதைய இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகம் பொறுப்பேற்க முன் இலங்கை கிரிக்கெட் தனது கணக்கில் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் பேணவில்லை.
இருப்பினும் தற்போதைய நிர்வாகம் கடந்த 2-3 ஆண்டுகளில் 40 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் வசூலித்துள்ளது.
35 மில்லியன் அமெரிக்க டொலர்களை மட்டுமே கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட்டைவிட தற்போது இலங்கை கிரிக்கெட்டிடம் அதிக நிதி உள்ளது.
இலங்கை ஆசியக் கிண்ணப் போட்டிகளை நடத்த முடியாத போதிலும் 4 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் பெற்றுள்ளது.
இலங்கை கிரிக்கெட் கடந்த 2-3 வருடங்களாக கடனைக் கோராதது சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை கிரிக்கெட்டின் நிலையான வைப்புத்தொகையில் உள்ள நிதி விவரங்களை அறிந்தவர்கள் இப்போது சேறுபூசும் பிரச்சாரத்தை உருவாக்குவதுடன் குற்றச்சாட்டுகளை சுமந்துகின்றனர். இது இறுதியில் கிரிக்கெட்டை மீண்டும் அழிவுப்பாதை்கு இட்டுச்செல்லும்.
இதேவேளைஇ வெளிச்சக்திகள் மீண்டும் கிரிக்கெட் விளையாட்டை அழிக்க முற்பட்டால் அதற்கு இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் அனுமதிக்காது எனவும் ஷம்மி சில்வா மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
10 Hours agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1475 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1475 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1475 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1476 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1476 Days ago