இந்திய விமானப்படையில் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
Oct 13, 2022 62 views Posted By : YarlSri TV
இந்திய விமானப்படையில் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
இந்திய விமானப்படையில் பெண் விமானிகள் மற்றும் தரைப்படை பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அசாம் மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் சீன எல்லைக்கு அண்மித்ததாக போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை பெண்கள் அதிக அளவில் இயக்கி வருகின்றனர்.
பெண் விமானிகள் மற்றும் தரைப்படை அதிகாரிகள் நாடு முழுவதும் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் உலகின் மிக உயரமான போர்க்களமான சியாச்சின் பனிப்பாறை செக்டார் முதல் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள விஜயநகரில் உள்ள கிழக்கு திசையில் தரையிறங்கும் தளம் வரை அனைத்து வகையான நிலப்பரப்புகளிலும் துருப்புக்களிலும் அவர்கள் பணியாற்றி வருவதாகவும் இந்திய விமானப்படையின் கிழக்கு கட்டளை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ளுச-30 யுஆஐ போர் ஜெட் விமானத்தின் இந்தியாவின் முதல் ஆயுத அமைப்பு இயக்குனர் லெப்டினன்ட் தேஜஸ்வி குறிப்பிடுகையில்இ கண்ணாடி கூரையை உடைத்துஇ நாட்டிற்கு சேவை செய்வதற்கான கனவுகள் நிறைந்த புத்திசாலித்தனமான பெண்கள் உள்ளனர்.
போர் விமானப் படையில் பெண்கள் இருப்பது தனித்துவமான அனுபவம் அல்ல. ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட அனைவரும் சமமாக கடினமாக உழைக்கிறோம்.
பயிற்சி செய்கிறோம். நாங்கள் சமமான நிலையில் இருக்கிறோம். வானத்திலும், தளத்திலும், நாங்கள் அனைவரும் முதன்மையான விமான வீரர்களாக செயற்படுகின்றோம் என்றார்.
அவ்னி சதுர்வேதி மற்றும் பாவ்னா காந்த் உள்ளிட்ட மூன்று பெண்கள் போர் விமானத்தில் பணியமர்த்தப்பட்டதன் மூலமாக இந்திய விமானப்படை முதல் முறையாக போர் விமானத்தில் பெண்களை அனுமதித்தது.
பின்னர் மிக்-21 விமானத்தில் முதன்முதலில் காந்த் தனியாகப் பறந்தார். ஷிவாங்கி சிங் பின்னர் ரஃபேல் விமானங்களில் விமானியாகினார்.
யுடுசு துருவ் மார்க்-3 விமானிகளான லெப்டினன்ட் அனி அவஸ்தி மற்றும் ஏ நைன் ஆகியோர் அருணாச்சல பிரதேசத்தின் அடர்ந்த காடுகள் மற்றும் உயரமான பகுதிகளுக்கு அருகில் தொடர்ந்து பறக்கின்றனர்.
இந்த விமானிகள் சிறப்பாக செயற்படுகின்றனர். எங்களைப் பொறுத்தவரை அவர்கள் பெண்கள் என்பதை விடவும் முதலில் விமானப் போர்வீரர்கள், அவர்கள் ஒதுக்கப்பட்ட பணிகளைச் செய்ய இயந்திரங்களை நன்றாகக் கையாள வேண்டும் அதனை செவ்வனே செய்கின்றார்கள் என்று கிழக்குக் கட்டளை அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்திய விமானப்படையில் தரை மற்றும் விமானப் பணிகளில் 1300 இற்கும் மேற்பட்ட பெண் அதிகாரிகள் பணிபுரிகின்றனர். படைகளில் 'ஸ்ரீ சக்தி'யை மேலும் மேம்படுத்துவதற்கான அரசாங்கக் கொள்கை மற்றும் அக்னிவீர் திட்டத்தில் பெண்களை விமானப்படையினராகத் தூண்டுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1472 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1472 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1472 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1472 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1472 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1472 Days ago