Skip to main content

கொழும்பில் மலசலகூட குழியில் விழுந்து இருவர் பலி

Mar 27, 2023 67 views Posted By : YarlSri TV
Image

கொழும்பில் மலசலகூட குழியில் விழுந்து இருவர் பலி 

கொழும்பு, கொட்டாஞ்சேனையில் இன்று (27) பிற்பகல் மலசலகூட குழியில் விழுந்து இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



மலசலகூட அமைப்பை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த கொழும்பு மாநகர சபையின்  தொழிலாளர்கள் இருவரே உயிரிழந்துள்ளனர்.



இதில், ஒருவர் மலசலகூட குழியில் விழுந்துள்ளார். அவரை காப்பாற்ற மற்றைய நபரும் மலசலகூட குழியில் இறங்கிய வேளை, அவரும் மலசலகூட குழியில் விழுந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.



ஆபத்தான நிலையில் மலசலகூட குழியில் விழுந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை