Skip to main content

பெண்கள் விஷயத்தில் ஆண்கள் முடிவெடுக்கலாமா? அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பிய ரோஹினி குமாரி

Mar 31, 2022 76 views Posted By : YarlSri TV
Image

பெண்கள் விஷயத்தில் ஆண்கள் முடிவெடுக்கலாமா? அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பிய ரோஹினி குமாரி 

  பெண்களின் உரிமைகள் தொடர்பில் முடிவெடுக்கும் அதிகாரம் ஆண்களுக்கு வழங்கப்படுவது நியாயமா என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.



கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,



அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் பேசும் போது, நல்லாட்சி அரசாங்கத்தினால் அரசியலில் பெண் பிரதிநிதித்துவம் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முக்கிய அம்சமாகும்.



பெண்கள் மற்றும் குழந்தைகள் நடத்தப்படும் விதம் ஒரு நாட்டின் வளர்ச்சி அளவை தீர்மானிக்க பயன்படும் காரணியாக உள்ளதகவும் அவர் சுட்டிக்காட்டினார்.



பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான கொள்கைகளை உருவாக்கும் நிறுவனங்களுக்குள் ஆண்கள் தீர்மானங்களை எடுப்பது அநீதியானது எனவும் ரோஹினி குமாரி விஜேரத்ன குறிப்பிட்டார்.



பெண்களுக்கு என்ன சேர்க்க வேண்டும் என்பதை ஆண்கள் எப்படி அறிவார்கள் என கூறிய அவர் , எனவே பெண்கள் அத்தகைய பதவிகளை வகிக்க வேண்டும் என்றார்.



உள்ளூராட்சி நிறுவனங்களில் பெண்களுக்கு 25 சதவீத பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளதாகவும் எனினும் தற்போது அது ஆபத்தில் இருப்பதாகவும் ரோஹினி குமாரி விஜேரத்ன கூறினார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை