யானதிபதியின் அறிவுறுத்தல்களை உயர் அதிகாரிகள் மதிக்கவில்லை!
Jan 18, 2022 104 views Posted By : YarlSri TV
யானதிபதியின் அறிவுறுத்தல்களை உயர் அதிகாரிகள் மதிக்கவில்லை!
இலங்கை மின்சாரசபையின் உயர் அதிகாரிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அறிவுறுத்தல்களை மதிப்பதில்லை என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கை மின்சாரசபையின் பதில் பொது முகாமையாளர் பதவிக்கு சுசந்த பெரேராவை நியமித்தமைக்கு மின்சாரசபையின் பொறியியலாளர்கள் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மின்சாரசபையின் மரபுகளுக்கு அமைய அதிக சேவை மூப்பு உடைய மின் பொறியியலாளரே பொது முகாமையாளர் பதவிக்கு அமர்த்தப்படுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், மரபுகளை மீறி தகுதி குறைந்த ஒருவர் பொது முகாமையாளர் பதவிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மின்சாரசபையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைமைகளுக்கு இந்த நியமனமே பிரதான ஏது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
எனவே தகுதியில்லாத ஒருவரை பதவியில் அமர்த்திய இலங்கை மின்சாரசபையின் உயர் அதிகாரிகளே இந்த பிரச்சினைகளுக்கு பொறுப்பு சொல்ல வேண்டுமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பொது முகாமையாளர் பதவிக்கு அமர்த்தும் போது உரிய மரபுகளை பின்பற்றுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ள நிலையில், அதனையும் மீறி சிலர் செயற்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1490 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1490 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1491 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1491 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1491 Days ago