இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு கண்டுபிடித்த பேராசிரியர்
Mar 24, 2022 412 views Posted By : YarlSri TV
இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு கண்டுபிடித்த பேராசிரியர்
நாட்டின் எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வாக சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் இயக்கக்கூடிய மின்சார முச்சக்கர வண்டியை பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மாணவர்கள் குழுவொன்று வடிவமைத்துள்ளது.
பேராதனை பல்கலைக்கழக ஆராய்ச்சி சிறப்பு கண்காட்சி நேற்று இடம்பெற்ற நிலையில் அங்கு முதல் முறையாக இந்த முச்சக்கர வண்டி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் மின் மற்றும் இலத்திரனியல் பொறியியல் துறையின் பேராசிரியர் லிலந்த சமரநாயக்க மின்சாரத்தில் இயங்கக்கூடிய இந்த முச்சக்கர வண்டியை ஊடகங்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
E வீலர் என அழைக்கப்படும் இந்த மின்சார முச்சக்கர வண்டியானது ஒரு முறை சார்ஜ் செய்தால் 60 கிலோமீற்றர் வரை பயணிக்கும் என பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
முச்சக்கரவண்டியை வர்த்தக ரீதியில் அறிமுகப்படுத்தும் போது, நாட்டில் உள்ள இரண்டு மில்லியன் முச்சக்கர வண்டிகளை மின்சாரத்தில் இயங்கும் வகையில் மாற்ற முடியும் என பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக பயன்படுத்தப்படும் பேட்டரியை முச்சக்கர வண்டி உரிமையாளர் சார்ஜ் செய்ய வேண்டியதில்லை என்பதே இதன் சிறப்பம்சம் என அவர் கூறியுள்ளார்.
வெறுமையான எரிவாயு சிலிண்டரை வழங்கி விட்டு புதிய எரிவாயு சிலிண்டரைப் பயன்படுத்தும் அதே வழியில் பயன்படுத்தப்படும் பேட்டரி இதற்கு பொருத்தப்பட்டுள்ளது.
சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியைப் பெறுவதற்கு நாடு முழுவதும் உள்ள சார்ஜிங் நிலையங்களுக்கு மின்சாரத்திற்கான சிறிய கட்டணத்தை மாத்திரம் செலுத்த வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்திட்டத்தை முன்னெடுக்க தனியார் நிறுவனம் முன்வந்துள்ளதாகவும் பேராசிரியர் லிலந்த சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
2 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
2 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
2 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
2 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
2 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
5 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1480 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1480 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1480 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1480 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1480 Days ago