Skip to main content

நடிகை ரங்கம்மா பாட்டி திடீர் மரணம்! வறுமையால் தங்க இடம் கூட இல்லாமல் உறவினர் வீட்டில் காலமானார்

Apr 30, 2022 60 views Posted By : YarlSri TV
Image

நடிகை ரங்கம்மா பாட்டி திடீர் மரணம்! வறுமையால் தங்க இடம் கூட இல்லாமல் உறவினர் வீட்டில் காலமானார் 

தமிழ் சினிமாவில் குணசித்திர வேடங்களில் நடித்த ரங்கம்மா பாட்டி வறுமையில் வாடி வருவதாக கடந்த வருடங்களாகவே செய்தி வந்து கொண்டிருந்தது. அவர் மெரீனாவில் கர்சீப் விற்றுக்கொண்டிருக்கும் புகைப்படம் வெளியாகி அனைவருக்கும் ஷாக் கொடுத்தது.



இந்நிலையில் இன்று அவர் உடல்நிலை மோசமாகி காலமானார். இந்த செய்தி சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து இருக்கிறது.





 



எம்ஜிஆர், ஜெயலலிதா தொடங்கி வடிவேலு வரை தமிழ் சினிமாவில் டாப் நட்சத்திரங்கள் பலருடனும் அவர் நடித்து இருக்கிறார். வடிவேலுவுடன் அவர் நடித்த நாய்க்கடி காமெடி பெரிய அளவில் பேமஸ்.



வறுமையில் வாடி வந்த அவர் தங்க இடம் இல்லாமல் வேறு ஒருவர் இடத்தில் தங்கி இருப்பதாகவும், தனக்கு உதவி செய்யும்படியும் அரசிடம் கடந்த மாதம் தான் கோரிக்கை வைத்து இருந்தார். இந்நிலையில் தற்போது அவர் மரணமடைந்து இருக்கிறார்.





ரங்கம்மா பாட்டி கோவை அன்னூர் பகுதியில் அவர் உறவினர் வீட்டில் தங்கி இருந்த நிலையில் காலமானார். அவரது இறுதிச்சடங்கு இன்றே நடைபெற உள்ளது.



 



அவரது மறைவுக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 



Gallery


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை