Skip to main content

லயன்ஸ் கழகத்தினர் யாழ்ப்பாண பொலிஸாருடன் இணைந்து யாழ் நகரில் கொரோணா விழிப் புணர்வு செயற்பாட்டில் ஈடுபட்டனர்!

Oct 17, 2020 283 views Posted By : YarlSri TV
Image

லயன்ஸ் கழகத்தினர் யாழ்ப்பாண பொலிஸாருடன் இணைந்து யாழ் நகரில் கொரோணா விழிப் புணர்வு செயற்பாட்டில் ஈடுபட்டனர்! 

தற்போது நாட்டில் நிலவும் கொரோணா தொற்று அச்ச  நிலைமையில்  யாழ் குடாநாட்டில் கொரோணா தொற்று பரவலை தடுக்கும் முகமாக  பொதுமக்களுக்கு கொரோணா தொடர்பாக விழிப்புணர்வூட்டும் முகமாக யாழ் நகர்  சிற்றி லயன்ஸ் கழகமும் யாழ்ப்பாண  போலீசாரும் இணைந்து யாழ்  மத்திய பேருந்து நிலையத்தில் கொரோனா விழிப்புணர்வு செயற்பாட்டினை  மேற்கொண்டிருந்தார்கள் 



குறித்த விழிப்புணர்வின்போது முகக்கவசம் அணியாது  யாழ் நகருக்குள் வருகை தந்த பொது  மக்களுக்கு முககவசங்கள் வழங்கி வைக்கப்பட்டது மேலும் சமூக இடைவெளி பேணுதல் , சுகாதார நடைமுறைகளை பின்பற்றுதல்தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி யினால் விழிப்புணர்வு செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டது 



குறித்த விழிப்புணர்வு செயற்பாட்டில் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ மற்றும் சிற்றி லயன்ஸ் கழக  உறுப்பினர்கள் மற்றும் யாழ்ப்பாண போலீசார் கலந்து கொண்டனர்


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை