Skip to main content

மக்களை ஏமாற்றியவர் தான் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி- அன்புமணி ராமதாஸ்...

Feb 17, 2022 98 views Posted By : YarlSri TV
Image

மக்களை ஏமாற்றியவர் தான் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி- அன்புமணி ராமதாஸ்... 

தருமபுரியில் பாமக வேட்பாளர்கள் அறிமுக பிரச்சார  கூட்டம் நடைபெற்றது, கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை வெளுத்து வாங்கி பேசினார்.



தருமபுரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவு திட்டமான ஒகேனக்கல் உபரி நீர் திட்டம் தொடர்பாக பாமக பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோரிடம் கையெழுத்து பெற்று அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியிடம் கொடுத்தோம், கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பிரச்சாரத்தின் போது ஏழு முறை பேசிய எடப்பாடி பழனிச்சாமி திட்டம் நிறைவேற்றப்படும் என வாக்குறுதியளித்திருந்தார்,



தேர்தல் முடிந்து நேரில் சந்தித்து கேட்ட போது திட்டத்தை நிறைவேற்ற நிதியில்லை எனக்கூறி தருமபுரி மாவட்ட மக்களை ஏமாற்றியவர்தான் எடப்பாடி பழனிச்சாமி என பேசிய அன்புமணி ராமதாஸ் இந்த மாவட்டத்தில் ஐந்து முறை வெற்றி பெற்றவர், அதிமுக முன்னாள்  அமைச்சராக இருந்த கே.பி. அன்பழகன், தருமபுரி மாவட்ட மக்களுக்கு இத்தனை ஆண்டுகளில் என்ன செய்துவிட்டார் என்றால் ஒன்றுமில்லை என பேசினார்.



 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை