Skip to main content

விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை கடித்துக் குதறிய குரங்குகள்... ஒரு பயங்கர சம்பவம்

Feb 10, 2022 77 views Posted By : YarlSri TV
Image

விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை கடித்துக் குதறிய குரங்குகள்... ஒரு பயங்கர சம்பவம் 

இந்தியாவில், ஆற்றங்கரையில் தன் நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த ஐந்து வயது சிறுமி ஒருத்தியைக் குரங்குகள் கடித்துக் குதறியதில், அந்தக் குழந்தை பரிதாபமாக பலியாகியுள்ளாள்.



உத்தரப் பிரதேசத்தில் உள்ள Nakatiya என்ற நதியின் கரையில் நர்மதா என்னும் அந்த ஐந்து வயது சிறுமி, தன் நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்திருக்கிறாள்.



அப்போது கூட்டமாக அங்கு வந்த குரங்குகள் சிறுமியைத் தாக்கியுள்ளன. மற்ற பிள்ளைகள் சத்தமிட, உள்ளூர் மக்கள் ஓடி வந்து, குழந்தையை குரங்கிடமிருந்து மீட்டிருக்கிறார்கள்.



நர்மதாவின் தந்தையான நந்த கிஷோர் குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றுள்ளார். ஆனால், குரங்குகள் குழந்தையின் தோலைக் கிழித்து, கிட்டத்தட்ட அவளது உடல் முழுவதுமே கடித்துக் குதறிவிட்டிருக்கின்றன.



ஆகவே, குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியாகிவிட்டாள்.



இந்த சம்பவம் அப்பகுதியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மக்கள் அந்தக் குரங்குகளை பிடிக்கவேண்டும் என வனத்துறையினரைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.கடந்த ஆண்டு டிசம்பரில், Majalgaon என்ற கிராமத்தில், 250 நாய்களைக் குரங்குகள் தூக்கிச் சென்று, கட்டிடங்கள் மற்றும் மரங்களின் உச்சியிலிருந்து வீசி எறிந்து கொன்ற சம்பவம் நினைவிருக்கலாம்.  


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை