Skip to main content

வடக்கு கிழக்கில் இடம்பெற்ற போராட்டம் விவசாயிகளின் போராட்டமாக தெரியவில்லை- திலீபன்...

Oct 20, 2021 192 views Posted By : YarlSri TV
Image

வடக்கு கிழக்கில் இடம்பெற்ற போராட்டம் விவசாயிகளின் போராட்டமாக தெரியவில்லை- திலீபன்... 

வடக்கு கிழக்கில் இடம்பெற்ற போராட்டம் விவசாயிகளின் போராட்டமாக தெரியவில்லை. அது கூட்டமைப்பினரின் போராட்டமாக தான் தெரிகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் கு. திலீபன் தெரிவித்தார்



வவுனியாவில் நேற்று (19) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.



அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,



வடக்கு கிழக்கில் இடம்பெற்ற போராட்டம் விவசாயிகளின் போராட்டமாக தெரியவில்லை. அது கூட்டமைப்பினரின் போராட்டமாக தான் தெரிகின்றது. காரணம் நான் செல்கின்ற அல்லது பார்க்கின்ற இடங்களில் விவசாயிகள் இந்த போராட்டங்களில் கலந்து கொண்டதாக தெரியவில்லை. அவர்களது வட்டார உறுப்பினர்கள், மாவட்ட உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தான் அந்த போராட்டங்களில் பங்கேற்கின்றனர்.



சேதன பசளை தொடர்பாக சில முரண்பட்ட கருத்துக்கள் இருந்தாலும் அரசாங்கம் அந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு முழு மூச்சாக நடவடிக்கை எடுத்துள்ளது. விரைவில் விவசாயிகளிற்கு சாதகமான பதில் வந்தடையும் என்றார்


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை