இழப்புகளை மீட்டெடுக்க சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தும் தாய்லாந்து!
Dec 18, 2020 186 views Posted By : YarlSri TV
இழப்புகளை மீட்டெடுக்க சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தும் தாய்லாந்து!
கொரோனா வைரஸ் தொற்று பரவல் முடக்கநிலையால் ஏற்பட்ட சுற்றுலாத்துறை இழப்புகளை மீட்டெடுக்க சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தாய்லாந்து அரசாங்கம் தளர்த்தியுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக உலக நாடுகள் பலவும் சுற்றுலாப் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தன. இதன்காரணமாக சுற்றுலாத் துறையை நம்பிய பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில் தாய்லாந்து நாட்டு அரசாங்கம் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்துள்ளது.
புதிய தளர்வுகளின் மூலம் அவுஸ்ரேலியா, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் விசாக்கள் இல்லாமல் தாய்லாந்திற்கு பயணிக்க முடியும்.
மேலும், 30 நாட்களுக்கு வழங்கப்பட்ட விசா 45 நாட்களாக நீடிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் சுற்றுலாப் பயணிகள் 2 வார காலத்திற்கு தனிமைப்படும் நடைமுறை மட்டும் தொடரும் எனவும் அரசாங்கம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சில சுவாரஸ்யமான செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1489 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1489 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1489 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1490 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1490 Days ago