நாக சைதன்யாவுடன் விவாகரத்து - ரூ.200 கோடி ஜீவனாம்சத்தை ஏற்க நடிகை சமந்தா மறுப்பு!
Oct 03, 2021 128 views Posted By : YarlSri TV
நாக சைதன்யாவுடன் விவாகரத்து - ரூ.200 கோடி ஜீவனாம்சத்தை ஏற்க நடிகை சமந்தா மறுப்பு!
நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யா இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். அவர்கள் இரு குடும்பத்தினர் சம்மதத்தின் அடிப்படையில் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அதன் பின் இருவரும் ஐதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் ஒன்றாக வசித்து வந்தனர்.
இடையில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சமந்தா திருமணத்துக்கு பிறகு ஒரு படத்தில் படு கவர்ச்சியாக நடித்திருந்தார். இது நாக சைதன்யாவுக்கு பிடிக்கவில்லை. அதிலிருந்தே இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே நேற்று இருவரும் விவாகரத்து முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இருவரும் பிரிவதென்று முடிவு எடுத்ததையடுத்து, நாகசைதன்யா குடும்பத்தில் இருந்து சமந்தாவுக்கு ரூ.200 கோடி ஜீவனாம்சம் தருவதாக கூறினார்களாம். ஆனால் சமந்தா இதை ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. ‘நான் எனது சொந்த காலில் நிற்க கூடியவள். யாருடைய பணமும் எனக்கு வேண்டாம்‘ என்று சமந்தா கூறிவிட்டாராம்.
இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு பிரிந்து விடும் நிலை உருவானதையடுத்து இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த பலரும் முயற்சித்தனர். ஆனால் அது தோல்வியில்தான் முடிந்தது. நாகசைதன்யா தற்போது ஐதராபாத்தில் வசிக்கும் அடுக்குமாடி வீடு சமந்தாவுக்கு சொந்த மானதாகும். இந்த வீட்டை அவர் தனது சொந்த பணத்தில் வாங்கி இருந்தார். இருவரும் விவாகரத்து செய்வதாக அறிவித்திருப்பதால், நாக சைதன்யா அந்த வீட்டில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது.
சில சுவாரஸ்யமான செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1470 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1470 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1470 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1470 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1470 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1470 Days ago