பள்ளிவாசல் ஒன்றில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் விசேட விசாரணை...
Feb 06, 2022 86 views Posted By : YarlSri TV
பள்ளிவாசல் ஒன்றில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் விசேட விசாரணை...
சிலாபம் தும்மலசூரிய யகம்வெல பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று பிற்பகல் தொழுகைக்கு வந்தவர்களிடம் மௌலவி ஒருவருக்கு செலுத்துவதற்காக பணம் வசூலிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள பாடசாலை தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் ஒன்று ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாக்குவாதம் மோதலாக மாறிய நிலையில், தாக்குதலில் இருவர் காயமடைந்து குளியாப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பள்ளிவாசல் நிர்வாகம் தொடர்பாக அவ்வப்போது ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்காக சிலாபம் பிரிவுக்கு பொறுப்பான தும்மலசூரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சில சுவாரஸ்யமான செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago