Skip to main content

அதிமுக சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழா - ஓ.பி.எஸ். சொன்ன குட்டிக்கதை!

Dec 21, 2021 86 views Posted By : YarlSri TV
Image

அதிமுக சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழா - ஓ.பி.எஸ். சொன்ன குட்டிக்கதை! 

அ.தி.மு.க. சார்பில் சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஏழைகளின் சிறிய சகோதரிகளின் முதியோர் இல்லத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.



இந்த விழாவில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பங்கேற்றனர் .



விழாவில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசுகையில், அனைவருக்கும் எனது உள்ளம் கனிந்த கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில், ஏன் இந்தியாவிலேயே கல்வியையும், நவீன மருத்துவத்தையும் அறிமுகப்படுத்திய கிருஸ்துவர்களாகிய உங்களுக்கு அ.தி.மு.க. என்றென்றும் உறுதுணையாக இருக்கும் என தெரிவித்தார்.



இந்நிலையில், அதிமுக சார்பில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குட்டிக்கதை கூறினார். 



பாவத்தைச் சுமந்தவர்களை மனம் திருத்த வந்துள்ளேன் என்ற இயேசுவின் வரிகளைச் சுட்டிக்காட்டி ஒரு குட்டிக்கதை சொன்னார். இதைத் தொடர்ந்து பேசிய அவர், தவறு செய்பவர்கள் மனம் திருந்தி வந்தால் அவர்களை ஏற்பதே தலைமைக்கு அழகு என தெரிவித்தார்.



ஓ.பன்னீர்செல்வம் இந்த பேச்சு, மறைமுகமாக சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து சூசகமாக பேசியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

3 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை